தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்தது புரட்சித்தலைவி அம்மா தான் - பாமக தலைவர் அன்புமணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்தது புரட்சித்தலைவி அம்மா தான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் பாமகவின் சமூக நீதி பேரவை சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு  பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொய் பேசுவதாக கூறினார். மற்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ள போது தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று  ஸ்டாலின் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தான் என்றும் இல்லை என்றால் இட ஒதுக்கீடு பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்தார்.

Night
Day